அமெரிக்கா பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கிச் சூடு - 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழக வளாகம் அருகே இன்று (ஆகஸ்ட் 15) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அமெரிக்கா பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கிச் சூடு - 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் ஜெஸ்டர்பீல்ட் நகரில் உள்ள வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழக வளாகம் அருகே இன்று (ஆகஸ்ட் 15) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் 'குவாட் அனெக்ஸ்' (Quad Annexes) பகுதியில் உள்ள மாணவர் விடுதி அருகே உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் 'பல சந்தேக நபர்கள்' (multiple suspects) ஈடுபட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமில்லை (life-threatening இல்லை) என்றும், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து பல்கலைக்கழக வளாகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு (lockdown) பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக போலீஸ் மற்றும் செஸ்டர்பீல்ட் கவுண்டி போலீஸார் இணைந்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.