செப்டம்பர் 5 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி தலைமையில் விசேட மக்கள் பேரணிகள்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதனுடன் இணைந்து, கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறினால், அதனை மக்கள் திரட்சியின் மூலம் நிரூபித்துக் காட்டுமாறு அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் வீடுகளில் அமர்ந்து அரசியல் திட்டங்களை வகுப்பதை விடுத்து, மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலங்களை ஒப்பிட்டு அரசியல் கருத்துகளை வெளியிடுவதில் மாத்திரம் பயனில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தற்போது கிராம மட்டத்திலும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் கோட்டச் சபைகளை மீளமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் மாவட்டங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து உண்மையாக இருந்தால், அதனை மக்கள் கூட்டங்களின் ஊடாக வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் முன்னெடுத்த அரசியல் மற்றும் மக்கள் தொடர்பான வேலைத்திட்டங்களை தற்போதைய அரசியல் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.