கின்னஸ் உலக சாதனை குத்துச்சண்டை நாயகன் ஜொலானி டெட்டே வீட்டு வாசலில் சுட்டுக் கொலை

37 வயதான முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜொலானி டெட்டே, கிழக்கு கேப்பில் தனது வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
கின்னஸ் உலக சாதனை குத்துச்சண்டை நாயகன் ஜொலானி டெட்டே வீட்டு வாசலில் சுட்டுக் கொலை

தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான ஜொலானி டெட்டே அவர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 37 வயதான இவர், 2007 முதல் 2008 ஆம் ஆண்டு வரை உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் பிளைவெயிட் பிரிவிலும், 2017 முதல் 2019 வரை உலக குத்துச்சண்டை அமைப்பின் சார்பில் நடந்த போட்டிகளிலும் உலக சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியவர்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க விளையாட்டு, கலைகள் மற்றும் கலாசார துறை மந்திரி கெய்டன் மெக்கென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெட்டே தனது காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் என்றும், கிழக்கு கேப் நகரில் உள்ள டான்ட்சேன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டின் வாசலுக்கு வந்ததும், கதவு திறப்பதற்காக வெளியே காரில் சிறிது நேரம் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த முக்கியமான வேளையில்தான், முகமூடி அணிந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அங்கு வந்து, அவரை நோக்கித் துப்பாக்கிகளால் பலமுறை சுட்டனர். இந்தத் தாக்குதலில் டெட்டே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அதே வேளையில் அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்தார், அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மந்திரி மேலும் தெரிவித்தார்.

இந்த மிருகத்தனமான தாக்குதலை அவர் கடுமையாகக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஜொலானி டெட்டே 2017 ஆம் ஆண்டு நடந்த பட்டம் பெறும் போட்டியில், தனது எதிராளியான சிபோனிசோ கொன்யா என்பவரை வெறும் 11 வினாடிகளில் வீழ்த்தி, கின்னஸ் உலக சாதனையைப் படைத்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.