கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவி... டெஸ்ட் ஓய்வுக்கு பின்னர் கிடைத்த வாய்ப்பு.. முழு விபரம் இதோ!
மீண்டும் கோலிக்கு கேப்டன் பதவியை கொடுத்தால், அனுபவத்தை பயன்படுத்தி அவர் கோப்பை வென்றுகொடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள், மே 17ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும். மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதும்.
இந்நிலையில், இப்போட்டியில், ஆர்சிபி அணிக் கேப்டன் ராஜத் படிதர் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், படிதருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டதாகவும், அந்த காயம் தற்போதுவரை சரியாகவில்லை என்றும், இது சரியாக இன்னமும் ஒரு மாத காலம் கூட ஆகலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், ஆர்சிபி விளையாடும் எஞ்சிய போட்டிகளில் ராஜத் படிதர் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜத் படிதருக்கு மாற்றாக கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆர்சிபி அணி மீட்டிங்கில் தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள். சிலர் ஜிதேஷ் சர்மா பெயரை தேர்வு செய்த நிலையில், பலர் விராட் கோலிக்கு மீண்டும் கேப்டன் பதவியை தர வேண்டும் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்சிபி 11 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று, பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டார்கள். அடுத்து, கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால், முதல் இரண்டு இடங்களில் ஒன்றை உறுதி செய்ய, வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
மேலும், இம்முறை ஆர்சிபி அணி கோப்பை வெல்ல, நல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதால், மீண்டும் கோலிக்கு கேப்டன் பதவியை கொடுத்தால், அனுபவத்தை பயன்படுத்தி அவர் கோப்பை வென்றுகொடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
போட்டி, மே 17ஆம் தேதி துவங்க உள்ளதால், அதற்குமுன், மே 16ஆம் தேதி ஆர்சிபிக்கு கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.