பராபவ தமிழ்ப் புத்தாண்டு 2026: வாக்கிய பஞ்சாங்கம் அட்டவணை

60 தமிழ் ஆண்டுகளில் 40-வது ஆண்டான மங்களகரமான பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு, வரும் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, அன்று காலை 08:40 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதன் மூலம் இந்தப் புத்தாண்டு மலர்கிறது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
பராபவ தமிழ்ப் புத்தாண்டு 2026: வாக்கிய பஞ்சாங்கம் அட்டவணை

60 தமிழ் ஆண்டுகளில் 40-வது ஆண்டான மங்களகரமான பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு, வரும் ஏப்ரல் 14, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, அன்று காலை 08:40 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பதன் மூலம் இந்தப் புத்தாண்டு மலர்கிறது.

விஷு புண்ணிய காலம் (மருந்துநீர்)

ஏப்ரல் 14 அதிகாலை 04:40 மணி முதல் நண்பகல் 12:40 மணி வரை மருந்துநீர் வைத்து நீராடுவது சிறந்தது.

ஆடையின் நிறம்

சிவப்பு, பட்டு போன்ற வெண்மை நிற பட்டாடை அல்லது இந்த நிறங்களைக் கரையாகக் கொண்ட ஆடைகளை அணிவது ஐஸ்வர்யத்தைத் தரும்.

கைவிஷேடம்

 ஏப்ரல் 15 (புதன்கிழமை) மற்றும் ஏப்ரல் 20 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுப நேரங்களில் பெரியவர்களிடம் ஆசி பெற்று கைவிஷேடம் பெறுவது வழக்கமாகும்.

வருடப் பொதுப் பலன்கள்

பஞ்சாங்கக் கணிப்புகளின்படி, பராபவ வருடம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும்:

வானிலை மற்றும் விவசாயம்

இவ்வருடம் முன்மழை சமமாகவும், பின்மழை அதிகமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும்.

பொருளாதாரம்

மக்கள் மத்தியில் பணப்புழக்கம் சீராக இருக்கும். புதிய தொழில் தொடங்குவோருக்குச் சாதகமான சூழல் அமையும்.

ஜோதிட பார்வை

இந்த ஆண்டில் குரு பகவான் மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு (உச்சம்) பெயர்ச்சியாவதும், சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிப்பதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்

இந்த புத்தாண்டு பிறக்கும் போது திருவாதிரை, புனர்பூசம் (4ம் பாதம்), பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் (3, 4ம் பாதம்), சதயம், பூரட்டாதி (1, 2, 3ம் பாதம்) ஆகிய நட்சத்திரங்களுக்கு சங்கிரம தோஷம் உள்ளதால், அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இறைவழிபாடு மற்றும் பரிகாரங்களைச் செய்வது நல்லது.

இந்த பராபவ வருடம் அனைத்து மக்களுக்கும் அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்கட்டும்.

Click for more latest ஆன்மீகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர