7 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவுக்கு மீண்டும் செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு செல்ல உள்ளார். சீனா–வடகொரியா உறவுகளை வலுப்படுத்தும் இந்த பயணம் சர்வதேச அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.


7 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவுக்கு மீண்டும் செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அண்டை நாடான வடகொரியா சமீப காலங்களில் ரஷியாவுடன் அதிக ஒத்துழைப்பை வளர்த்து வருவதோடு, உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வடகொரியாவுடன் தனது தூதரக மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் சீனா நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வடகொரியாவுக்கு செல்ல இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டை விஜயம் செய்திருந்தார்.

சீனா மற்றும் வடகொரியா இடையிலான உறவு நீண்ட காலமாக நட்பு அடிப்படையில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் கூட வடகொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக சீனா முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் சர்வதேச அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google