"விஜயைப் போல ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை" - நடிகை மீனாட்சி சவுத்ரி பாராட்டு

Key Points
  • விஜயைப் போன்ற ஒழுக்கமான மனிதரை தாம் பார்த்ததில்லை என்றும், காலை 7 மணிக்கு ஷாட் என்றால் சரியாக 7 மணிக்கு ஸ்பாட்டில் வந்துவிடுவார் என்றும் பாராட்டி...
"விஜயைப் போல ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை" - நடிகை மீனாட்சி சவுத்ரி பாராட்டு

தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ படங்களிலும், தெலுங்கில் ‘ஹிட்’ அடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்திலும் நடித்து பான் இந்திய நடிகையாக உயர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி. தற்போது நாக சைதன்யா ஜோடியாக ‘விருஷகர்மா’ படத்திலும், இரண்டு புதிய இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனாட்சி சவுத்ரி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

"விஜய் அவர்களைப் போல ஒரு ஒழுக்கமான மனிதரை நான் பார்த்ததே இல்லை. காலை 7 மணிக்கு ஷாட் என்றால், சரியாக 7 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார். பிறரின் நேரத்தை மதிப்பவர். ‘ஆக்ஷன்’ என்று சொல்லும் வரை அமைதியாக இருப்பார், அதன் பின் அப்படியே மாறிவிடுவார்."

"முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே வாழ்த்து அனுப்பினேன். பதிலளிக்க சில நாட்கள் ஆகும் என்று நினைத்தேன், ஆனால் உடனே ‘தேங்க்யூ’ என்று மெசேஜ் அனுப்பினார். நம்மோடு பணிபுரிந்த ஒருவர் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது. அவர் வரலாறு படைத்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

தன்னுடன் பணிபுரிந்த முன்னணி நடிகர் இன்று முதலமைச்சராக உயர்ந்திருப்பதில் தனக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் இருப்பதாகவும், அவரது ஒழுக்கமும், நேரத்திற்கான மதிப்பும், பணிவும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் மீனாட்சி சவுத்ரி தனது பேட்டியில் மேலும் தெரிவித்தார்.

Click for more latest சினிமா news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google