அஸ்வெசும நலன்புரி திட்டம்: மே மாத கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
- அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மே மாத கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படுவதாக ...
- முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பயனாளிகள் இதில் உள்ளடங்குகின்றனர்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மே மாத கொடுப்பனவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த தொகை இன்று (29) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற முதியோர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான முதியோர்கள் நேரடியாக தங்களது ‘அஸ்வெசும’ வங்கிக் கணக்குகள் வழியாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற 70 வயதுக்கு மேற்பட்டோருக்காக மொத்தம் 312 கோடியே 56 இலட்சம் ரூபாய் (3,125,600,000) வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது. அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்ட 73,663 பயனாளிகளுக்காக 36 கோடியே 83 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் (368,315,000) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி திட்டம் மூலம் முதியோர் சமூகத்தின் வாழ்க்கைச் செலவுகளை குறைக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் இன்று முதல் இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
