கேப்டன் பதவி நீக்கம்: சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக அஸ்வின் கண்டனம் - 'மனிதநேயம் எங்கே?'

Key Points
  • இந்திய டி20 அணியில் இருந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டமைக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித...
கேப்டன் பதவி நீக்கம்: சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக அஸ்வின் கண்டனம் - 'மனிதநேயம் எங்கே?'

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதற்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து முழுமையாக நீக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்ததை அடுத்து, இந்த முடிவை அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

"உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டனிடம் மனிதநேயம் எங்கே காணாமல் போனது?" என்று கேள்வி எழுப்பிய அவர், சூர்யகுமார் யாதவுக்கு குறைந்தபட்சம் இன்னும் இரண்டு அல்லது மூன்று தொடர்களாவது வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சூர்யகுமார் கேப்டனாக 52 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்று சிறப்பான சாதனை படைத்திருப்பதாகவும், அவரை அணியிலிருந்து முழுமையாக நீக்குவது முறையான முடிவல்ல என்றும் அஸ்வின் தெரிவித்தார்.

"தோனி கோப்பையை வென்ற பின்னர் ஃபார்மை இழந்தார், அவரையும் நீக்கியிருப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அஸ்வின், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் நேர்மையான தொடர்பாடல் இருக்கிறது, ஆனால் இந்தியாவில் அது இல்லாமல் போய்விட்டது என்றும் வருத்தம் தெரிவித்தார்.

மேலும், ரஜத் படிதார் குறித்தும் பேசிய அவர், ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், தற்போதைய சூழலில் அணியில் ஷிவம் துபேயே சிறப்பாக செயல்பட்டு வருவதால், படிதாருக்கு இப்போதைக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் கருத்து தெரிவித்தார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google