அரசின் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் – புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அதற்குத் தீர்வுகாணப் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
அரசின் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் – புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரசின் இணைந்த சேவைகளில் (Combined Services) உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், அதனால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காகப் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் (Public Service Commission) அங்கீகரிக்கப்பட்ட இடமாற்ற நடைமுறையின்படி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் (Director General of Combined Services) இந்த வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த வருடாந்த இடமாற்றச் செயல்முறையின் மூலம் உத்தியோகத்தர்களுக்குப் பல்வேறு பணிஸ்தலங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதுடன், இதன் ஊடாக உத்தியோகத்தர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதும், நிறுவனங்களின் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இணைந்த சேவைகளின் உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றச் செயல்முறைக்குரிய முக்கியப் படிமுறைகள் குறித்தும் இந்தச் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கை அமல்படுத்தப்படுவதன் மூலம், இடமாற்றம் தொடர்பான நெருக்கடிகள் குறைந்து, உத்தியோகத்தர்களின் சேவைத் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.