விமல் வீரவன்சவுக்கு 10 லட்சம் அபராதம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்திய தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச 'நெத்த வெனுவட்ட எத்த' புத்தகத்தை வெளியிட்டதன் மூலம் புலமைச் சொத்துரிமையை மீறியதாக டில்வின் சில்வா தொடர்ந்த வழக்கில், கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) உறுதி செய்துள்ளது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
விமல் வீரவன்சவுக்கு 10 லட்சம் அபராதம்: மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்திய தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நட்டஈட்டுத் தொகையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது.

'நெத்த வெனுவட்ட எத்த' (இல்லாததற்குப் பதிலாக உண்மை) என்ற நூலை அச்சிட்டதன் மூலம் புலமைச் சொத்து சட்டத்தை மீறியதாக டில்வின் சில்வா தொடர்ந்த வழக்கில், 2019 ஜனவரியில் கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இந்த நட்டஈட்டுத் தொகையை விதித்து உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக விமல் வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவைத் தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து உறுதி செய்துள்ளது.

நீதிபதிகள் ஜனக் டி சில்வா, ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மனு பரிசீலனை செய்யப்பட்டபோது, நீதிபதி ஷிரான் குணரத்ன தனது தீர்மானத்தில், வணிக மேல் நீதிமன்றத்தின் இந்த இழப்பீட்டு உத்தரவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என்று அறிவித்தார்.

அத்துடன், குறித்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள டில்வின் சில்வாவுக்குச் சொந்தமான ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) ஆவணங்களை மீண்டும் அச்சிடவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ விமல் வீரவன்சவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகத்தில், டில்வின் சில்வா ஜேவிபி கட்சியில் இருந்த காலத்தில் கட்சியின் செயற்குழுவில் முன்வைத்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் இணைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து தனது புலமைச் சொத்துரிமை மீறப்பட்டதாக கூறி டில்வின் சில்வா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் டில்வின் சில்வா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும், விமல் வீரவன்ச சார்பில் சட்டத்தரணி நிஷான் பிரேமதிலகவும் ஆஜராகியிருந்தனர். இந்த மேன்முறையீட்டு விசாரணையில் வழங்கப்பட்ட தீர்ப்பானது, புலமைச் சொத்துரிமை சம்பந்தமான வழக்குகளில் முக்கியமான ஒரு சட்ட முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click for more latest கொழும்பு news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர