கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேர நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (04) 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, நாளை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
முல்லேரியா உப மின் நிலையத்தில் மின்சார விநியோகக் கட்டமைப்புக்கான அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தெஹிவளை மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையங்களில் முன்னெடுக்கப்படும் மேம்பாட்டுப் பணிகளின் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்விநியோகத் தடை கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் அமுலாகும்.
மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளிலும் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே, பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
