ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் சனி மற்றும் சுக்கிரன் ஒரே ராசியில் இணைவது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜோதிடக் கணிப்புகளின் படி, ஜனவரி 28 ஆம் தேதி காலை 7.29 மணிக்கு சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் இடையே ஒரு விசேஷமான கிரக சேர்க்கை உருவாகிறது.