உலகக்கோப்பை முதல் போட்டியிலேயே அதிர்ச்சி! தென் ஆப்பிரிக்காவை சாய்த்த மெக்சிகோ அசத்தல் வெற்றி!

மெக்சிகோ சிட்டியில் தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ வெற்றி பெற்றது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
உலகக்கோப்பை முதல் போட்டியிலேயே அதிர்ச்சி! தென் ஆப்பிரிக்காவை சாய்த்த மெக்சிகோ அசத்தல் வெற்றி!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாகக் கருதப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர், மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க விழா மெக்சிகோ சிட்டியில் இன்று நடைபெற்றது.

தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 9வது நிமிடத்திலேயே மெக்சிகோ வீரர் ஜூலியன் அண்ட்ரே குவானிஸ் ஒரு சிறப்பான கோலை பதிவு செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

முதல் பாதியிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ அணி, ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ரவுல் ஜெமிஸ் மூலம் மேலும் ஒரு கோலை அடித்து முன்னிலை உயர்த்தியது. தென் ஆப்பிரிக்கா அணி பல முறை கோல் முயற்சிகளை மேற்கொண்டாலும், மெக்சிகோ பாதுகாப்பு வீரர்கள் அவற்றை திறமையாக தடுத்தனர்.

இறுதியில், 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இந்த வெற்றியுடன் ரசிகர்கள் மத்தியில் மெக்சிகோ அணிக்கு உற்சாகம் அதிகரித்துள்ளது.

அடுத்த லீக் போட்டியாக தென்கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் இன்று காலை 7.30 மணிக்கு மோத உள்ளன. தொடரின் ஆரம்பத்திலேயே போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Click for more latest கால்பந்து news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.