ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இருக்கா?  ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி தகவல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் தகவல் தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20: சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு இருக்கா?  ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி தகவல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணியில் இப்ராஹிம் ஜோர்டன் 37 ஓட்டங்களையும், ரஷித் கான் 28 ஓட்டங்களையும், டார்விஸ் ரசூலி 26 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய பந்துவீச்சில் நிதிஷ் ரெட்டி மூன்று விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 14.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை எடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 57 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 39 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 38 ஓட்டங்களையும் எடுத்தனர்.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி செப்டம்பர் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது தொடர்பாக இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அனைத்து வீரர்களுக்கும் ஆடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும், அப்பொழுதுதான் அவர்களுக்கு ஆடுகளம் மற்றும் காலநிலைக்கு ஏற்ப நல்ல பயிற்சி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பெஞ்சில் அமர்ந்துள்ள வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், அணி சேர்க்கையில் சில மாற்றங்கள் செய்ய வாய்ப்பிருந்தாலும் யாருக்குப் பதிலாக யார் களமிறங்குவார்கள் என்பதைத் தற்போது உறுதியாகக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மூன்றாவது போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அவர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாகக் களமிறங்குவாரா அல்லது அபிஷேக் சர்மாவுக்கு மாற்றாக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அபிஷேக் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி தொடக்க வீரர்களாகக் களமிறங்கக் கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

மேலும் பந்துவீச்சாளர்களான யாஷ் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இத்தொடரில் ஷிவம் துபேவுக்கு பந்துவீச்சில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படாமல் நிதிஷ் ரெட்டிக்கே அதிக ஓவர்கள் வழங்கப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google