இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம்
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இப்ராகிம் சத்ரான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இப்போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
இத்தொடருக்கான இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் ஷிவம் துபே, நிதிஷ் குமார், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் இப்ராகிம் சத்ரானுடன் ரஹ்மானுல்லா குர்பாஸ், நூர் ரஹ்மான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷீத் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.