ஹர்திக் பாண்டியா டீல் ஓவர்.. யாரும் கவலைப்படத் தேவையில்லை.. உண்மையை சொன்ன அஸ்வின் நண்பர்!

பிரபல கிரிக்கெட் பகுப்பாய்வாளரும், அஸ்வினின் நெருங்கிய நண்பருமான பிரசன்னா அகோரம், ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வரும் டிரேட் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
ஹர்திக் பாண்டியா டீல் ஓவர்.. யாரும் கவலைப்படத் தேவையில்லை.. உண்மையை சொன்ன அஸ்வின் நண்பர்!

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஹர்திக் பாண்டியா டிரேட் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாக பிரபல கிரிக்கெட் பகுப்பாய்வாளரும், அஸ்வினின் நெருங்கிய நண்பருமான பிரசன்னா அகோரம் தனது யூடியூப் சேனலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரசன்னா அகோரம் கூறுகையில், மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாகவும், அதற்கு பதிலாக சிஎஸ்கே அணியில் இருந்து சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மும்பை அணி அன்சுல் கம்போஜையும் சேர்த்து கேட்கிறது, ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் அவரை கொடுக்க மாட்டார்கள் என அவர் கருதுகிறார்.

இரு அணிகளுக்கும் சாதகமா?

இந்த டிரேட் ஒப்பந்தம் இரு அணிகளுக்கும் சாதகமான ஒன்றாகவே அமையும் என பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸுக்கு: சிவம் துபேவுக்கு வான்கடே மைதானம் மிகவும் பிடித்தமானது; அங்கு அவரது பேட்டிங் சிறப்பாக அமையும். மேலும், போல்ட் இடத்தை கலீல் அஹ்மத் எளிதாக நிரப்ப முடியும். ரூதர்ஃபோர்ட் இடத்தில் சிவம் துபே இறங்குவதன் மூலம், மும்பை அணி இரு வெளிநாட்டு வீரர்களை வெளியேற்றிவிட்டு, வேறு சில வலிமையான வீரர்களை கொண்டு வர முடியும்.

சிஎஸ்கேவுக்கு: ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால், 4 ஓவர்கள் பவுலிங் மற்றும் ஃபினிஷிங்கில் பேட்டிங் என அவர் அசத்தலாக அமைவார். தோனி உடனிருக்கும் போது ஹர்திக் பாண்டியா கூடுதல் உற்சாகமாக இருப்பார்.

பிற சாத்தியமான நகர்வுகள்:

உர்வில் படேல்: உர்வில் படேலை குஜராத் அணிக்கு கொடுத்துவிட்டு, சாய் கிஷோரை சிஎஸ்கே வாங்க உள்ளது. குஜராத் அணியில் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால், அவர் சிஎஸ்கே பக்கம் வர விரும்புகிறார்.

பிரசாந்த் வீரா: பிரசாந்த் வீராவை சிஎஸ்கே அணி இம்முறை ரிலீஸ் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன்சி குறித்து?

கேப்டன்சி குறித்து இப்போதைக்கு தெரியவில்லை என்றாலும், அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய வலிமையை அடையும் என்று பிரசன்னா அகோரம் கூறியுள்ளார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.