வெள்ள அனர்த்த எச்சரிக்கை - கடற்படையினர் தயார் நிலையில்

சீரற்ற காலநிலை: இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.


வெள்ள அனர்த்த எச்சரிக்கை - கடற்படையினர் தயார் நிலையில்

சீரற்ற காலநிலை: இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பவும், திடீர் வெள்ளம் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தத்திலிருந்து மீட்பதற்காக, தென் கடற்படை கட்டளை தலா ஒரு நிவாரணக் குழுவாக காலி, அக்குரஸ்ஸ, அத்துரலிய மற்றும் தவலம ஆகிய பகுதிகளுக்கும் கம்புருபிட்டிய பகுதிக்கு இரண்டு நிவாரணக் குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் மேலதிக நிவாரண குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google