புஜாரா, ரஹானே ஓய்வு?.. உளறி கொட்டிய ரோகித் சர்மா

இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித். 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
புஜாரா, ரஹானே ஓய்வு?.. உளறி கொட்டிய ரோகித் சர்மா

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித். 

அப்போது, "நாங்கள் எப்போதும் நண்பர்களாக உள்ளோம். அணியில் இல்லாவிட்டாலும் நாங்கள் சந்திப்போம். ரஹானே மும்பையில் இருப்பதால் அடிக்கடி அவரை பார்ப்பேன். புஜாரா ராஜ்கோட்டில் உள்ளதால் அவரை அடிக்கடி சந்திக்க முடிவதில்லை” என்றார்.

இதன்போது, புஜாராவும் ரஹானேவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை உணர்ந்த ரோகித்  "நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை. புஜாராவும் ஓய்வு பெறவில்லை. உங்களின் கேள்வியால் தான் இப்படி பதில் கூறி விட்டேன்.

இந்த நேரத்தில், மூவரும் இந்திய அணியில் இல்லை, ஆனால் அஸ்வின் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ரஹானே மற்றும் புஜாரா இந்திய அணிக்கு திரும்பி வரலாம். அவர்களுக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்றார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.