90 நாட்களுகளுக்கு திறக்கும் அதிர்ஷ்ட கதவு... சிம்மத்தில் கேது சஞ்சாரம்.. இந்த 3 ராசிகளுக்கு திடீர் ராஜயோகம்!
சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கேதுவால் அடுத்த 90 நாட்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகும் 3 ராசிகள் எவை? முழு பலன்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் ஞானகாரகனாகவும் நிழல் கிரகமாகவும் விளங்கும் கேது பகவான், ஆன்மீகம், உள்ளுணர்வு மற்றும் முக்தி ஆகியவற்றுக்கு அதிபதியாக திகழ்கிறார். சொந்த ராசி இல்லாத கேது பகவான் எப்போதும் வக்ர கதியில் பின்னோக்கி நகரக்கூடியவர். சனி பகவானுக்கு அடுத்தபடியாக ஒரு ராசியில் அதிக காலம், அதாவது சுமார் 18 மாதங்கள் வரை சஞ்சரிக்கக்கூடிய சக்தி வாய்ந்த கிரகமாக கேது கருதப்படுகிறார்.
தற்போது கேது பகவான் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். வரும் டிசம்பர் மாதம் வரை சிம்ம ராசியில் நீடிக்கும் கேது, அதன் பின்னர் கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். இதனால் அடுத்த வரும் 90 நாட்கள் கேதுவின் சஞ்சார நிலையால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண வரவு, தடைபட்ட காரியங்களில் வெற்றி மற்றும் எதிர்பாராத அதிர்ஷ்ட யோகங்கள் தேடி வரவுள்ளன. அந்த அதிர்ஷ்ட பலன்களைப் பெறப்போகும் 3 ராசிகள் எவை என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேதுவின் இந்த நிலை தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பொற்காலத்தை உருவாக்கும். புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதற்கான சாதகமான சூழலும் முதலீடுகளும் கைகூடும். தொழில் ரீதியான பயணங்கள் மூலமாக இரட்டிப்பு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நீண்ட நாள் கடின உழைப்புக்கு நிர்வாகத்தின் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரத்தால் அடுத்த மூன்று மாதங்கள் அபரிமிதமான நன்மைகள் வந்து சேரும். சமூகத்தில் செல்வாக்கு மிக்க புதிய நபர்களின் நட்பு கிடைத்து, அதன் மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சுப காரிய முயற்சிகள் கைகூடும் என்பதுடன், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும். கடுமையான நிதி நெருக்கடிகள் நீங்கி சேமிப்பு கணிசமாக உயரும். கணவன் மனைவி இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இல்லறத்தில் அமைதி நிலவும். நீண்ட நாட்களாக சந்திக்காத நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து சுப முயற்சிகளிலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுவதை உணர முடியும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. தனிப்பட்ட ஜாதக அமைப்பிற்கு ஏற்ப பலன்கள் மாறுபடலாம். தொழில்முறை முடிவுகளுக்கு தகுதியான ஜோதிட வல்லுநர்களை அணுகவும்.