அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் விபத்து: வாகனங்கள் மீது மோதி தீப்பற்றியதில் நால்வர் பலி

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் விபத்து: வாகனங்கள் மீது மோதி தீப்பற்றியதில் நால்வர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் பிரைம் எயார் சரக்கு விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகி வீதியிலிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரிலிருந்து மியாமியை நோக்கிப் பயணித்த போயிங் 767 ரக சரக்கு விமானமே இவ்வாறு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் இரண்டு மணியளவில் தரையிறங்கிய குறித்த விமானம், ஓடுபாதையைத் தாண்டி சுமார் அறுநூறு அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள வீதியைக் கடந்து வாகனத் தரிப்பிடப் பகுதியில் மோதி நின்றது. இந்த விபத்தின் போது வீதியில் பயணித்த பல வாகனங்கள் மீது விமானம் மோதியதைத் தொடர்ந்து பாரிய தீப்பரவல் ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த மியாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தில் தரையில் நின்றிருந்த வாகனங்களில் பயணித்தவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து மியாமி சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானத் தரையிறக்கங்கள் மற்றும் புறப்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டன. இதனால் குறித்த விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த ஏனைய விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதுடன், விமானப் போக்குவரத்து சேவைகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை ஆகியவை விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. விமானத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது தரையிறக்கப் பிழை காரணமாக இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதா என்பது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google