கொழும்பு கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு: இருவர் படுகாயம், சந்தேக நபர் கைது

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

04 Sep 2026, 07:29 AM
1 நிமிடம் வாசிப்பு

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு: இருவர் படுகாயம், சந்தேக நபர் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW