2029இல் விஜய் பிரதமர் வேட்பாளர்? கனிமொழியின் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு
2029ஆம் ஆண்டு விஜய்யை இந்திய பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ள கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
2029ஆம் ஆண்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை இந்திய பிரதமர் பதவியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கனிமொழி, 2029ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் விஜய்தான் என குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என தம்மிடம் கேட்கப்பட்டபோதும் விஜய்தான் முதல்வராக வருவார் என தாம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர் விஜய் முதல்வரானதை நாடே பார்த்ததாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், 2029ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் யார் என்பதை டெல்லியில் இருந்து தீர்மானிக்க முடியாது என்றும், அந்த முடிவு தமிழகத்தில் இருந்தே எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2029ஆம் ஆண்டு இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்ட கனிமொழி, அப்போது காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து பயணிக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பது தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
விஜய்யை தமிழக முதல்வர் பதவியில் அமர வைத்தது ராகுல் காந்திதான் எனக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் ராகுல் காந்தியே விஜய்யின் கையைப் பிடித்து பிரதமர் பதவியில் அமர வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விஜய்யின் தேசிய அரசியல் பயணம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், 2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் கனிமொழி தெரிவித்துள்ள இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.