இப்படி நடந்ததே இல்லை.. 147 வருட வரலாறு.... ஆப்பு வைத்துக் கொண்ட இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணி தனது 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு அணியை தேர்வு செய்ததே இல்லை என்ற அளவுக்கு பெரிய சொதப்பல் ஒன்றை செய்துள்ளது. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இப்படி நடந்ததே இல்லை.. 147 வருட வரலாறு.... ஆப்பு வைத்துக் கொண்ட இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணி தனது 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு அணியை தேர்வு செய்ததே இல்லை என்ற அளவுக்கு பெரிய சொதப்பல் ஒன்றை செய்துள்ளது. 

ஸ்பின் பந்துவீச்சுக்கு இந்திய ஆடுகளங்கள் ஒத்துழைக்கும் என்பதால் மூன்று ஸ்பின்னர்களை அணியில் ஆட வைக்க முடிவு செய்தது இங்கிலாந்து அணி. 
அத்துடன், அணியில் ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளர் போதும் என்ற முடிவில், வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்-ஐ மட்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அத்துடன், அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 1877 முதல் ஆடி வரும்  இங்கிலாந்து அணி ஒரு முறை கூட ஒரே ஒரு வேகப் பந்துவீச்சாளரை மட்டும் அணியில் தேர்வு செய்து போட்டியில் களமிறங்கியதில்லை. 

வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் பேட்டிங்கிலும் சிறப்பாக செயற்படுவார் என்ற எண்ணத்தில் அவரை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. ஆனால், அவர் 2015இல் தான் ஒரு போட்டியில் துவக்க பந்துவீச்சாளராக பந்து வீசி இருந்தார்.

மூன்று ஸ்பின்னர்களுக்காக இங்கிலாந்து அணி எடுத்த இந்த தீர்மானங்கள் எந்த பலனும் அளிக்கவில்லை. இந்தியாவின் அனுபவ சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் 8 விக்கெட்களை வீழத்தி இருந்தனர்.

ஜாக் லீச் மற்றும் ரெஹான் அஹ்மத் மற்றும் டாம் ஹார்ட்லியை வைத்துக் கொண்டு இங்கிலாந்து அணி  திணறி வருகிறது. 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.