மலேசியாவில் ‘பறக்கும் டாக்டர்கள்’ ஹெலிகாப்டர் விபத்து: விமானி உள்பட 5 பேர் பலி
மலேசியாவின் சரவாக் மாகாணத்தில் 'பறக்கும் டாக்டர்கள்' மருத்துவ சேவைக்கான ஹெலிகாப்டர் லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மலேசியாவின் சரவாக் பகுதியில் ‘பறக்கும் டாக்டர்கள்’ சேவைக்கான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், விமானி மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போர்னியோ தீவில் அமைந்துள்ள சரவாக் மாகாணத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இந்த நடமாடும் ஹெலிகாப்டர் மருத்துவச் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கமான மருத்துவச் சேவைக்காகப் புறப்பட்டுச் சென்ற குறித்த ஹெலிகாப்டர், லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.