கண்ணீர் விட்டு கதறிய பாகிஸ்தான் வீரர்.. தேற்றிய ரோஹித் சர்மா.. நெகிழ்ச்சி சம்பவம்

பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது. 


கண்ணீர் விட்டு கதறிய பாகிஸ்தான் வீரர்.. தேற்றிய ரோஹித் சர்மா.. நெகிழ்ச்சி சம்பவம்

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் தனி ஆளாக போராடிய இளம் வீரர் நசீம் ஷா, தோல்விக்கு பின் கண்ணீர் விட்டு அழுத நிலையில், ரோஹித் சர்மா அவரை தேற்றி நெகிழ வைத்தார்.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி நிதானமாக இலக்கை நோக்கி நகர்ந்து 12 ஓவர்களுக்கு 72 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் மட்டுமே இழந்திருந்தது.

பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது. 

இமாத் வாசிம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி களத்தில் இருந்தனர். ஆனால், இமாத் வாசிம், அர்ஷ்தீப் சிங் வீசிய 20வது ஓவரின் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 

கடைசி மூன்று பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தொடர்ந்து இரண்டு ஃபோர் அடித்தார் நசீம் ஷா. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் எடுத்தார். பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

நசீம் ஷா கண்ணீர் விட்டு அழுதார். அப்போது நசீம் ஷாவின் கடைசி ஓவர் பேட்டிங்கை பாராட்டும் விதமாக ரோஹித் சர்மா அவரை தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லி விட்டு சென்றார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. 

என்னதான் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் எதிரிகளாக வெளியில் பார்க்கப்பட்டாலும் ஆடுகளத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சிறப்பானதாக உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google