ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை நோக்கி விராட் கோலி… 9000 ரன்களுக்கு அருகில்!

ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்களை எட்டும் முதல் வீரராக கோலி மாறவுள்ளார். இன்னும் 339 ரன்கள் எடுத்தால் புதிய மைல்கல்லை அடைவார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை நோக்கி விராட் கோலி… 9000 ரன்களுக்கு அருகில்!

ஐபிஎல் வரலாற்றில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி, தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறார்.

இதுவரை 267 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, மொத்தம் 8,661 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் 8,000 ரன்களை கடந்த ஒரே வீரராக திகழ்கிறார். இன்னும் 339 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களை எட்டும் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார்.

கடந்த சில சீசன்களாக கோலி அபாரமான பார்மில் உள்ளார். 2023 சீசனில் 639 ரன்கள் (சராசரி 53.25), 2024ல் 741 ரன்கள் (61.75), 2025ல் 657 ரன்கள் (54.75) என தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் (8) மற்றும் 63 அரைசதங்கள் அடித்த வீரராகவும் கோலி சாதனை படைத்துள்ளார். ரன்கள் பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதும் போட்டியில், கோலி தனது புதிய சாதனை வேட்டையை தொடங்க உள்ளார். ரசிகர்கள் அனைவரும் இந்த வரலாற்று தருணத்தைக் காத்திருக்கின்றனர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர