இந்தியா சொதப்ப இதுதான் காரணம்: ஒரு இன்ச்சால் அடுத்தடுத்து விக்கெட் இழந்த இந்தியா !

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : செஞ்சூரியன் பௌலிங் பிட்சில், புட்கள் அதிகம் இருந்ததால், இந்திய அணி நிச்சயம் தடுமாறும் எனக் கருதப்பட்டது. இறுதியில், அதேபோல்தான் நடந்தது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
இந்தியா சொதப்ப இதுதான் காரணம்: ஒரு இன்ச்சால் அடுத்தடுத்து விக்கெட் இழந்த இந்தியா !

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸை இழந்த இந்திய அணி, முதலில் களமிறங்கி சொதப்பி வருகிறது. டாப் ஆர்டர் பேட்டர்கள் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. கே.எல்.ராகுல் மட்டும்தான் அரை சதம் அடித்தார்.

செஞ்சூரியன் பௌலிங் பிட்சில், புட்கள் அதிகம் இருந்ததால், இந்திய அணி நிச்சயம் தடுமாறும் எனக் கருதப்பட்டது. இறுதியில், அதேபோல்தான் நடந்தது. பந்துகள் வழக்கத்திற்கும் மாறாக பவுன்ஸ் ஆனதால், அதனை இந்திய பேட்டர்களால் கணிக்க முடியவில்லை. 

குறிப்பாக, சீனியர் பேட்டர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 (14), விராட் கோலி 38 (64) போன்றவர்களால் கூட பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. டெஸ்டில், ரோஹித் ஷர்மா இன்னமும் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு அரை சதம் அடிக்கவில்லை என்ற குறை தொடர்கிறது. 

இளம் வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 17 (37), ஷுப்மன் கில் 2 (12) போன்றவர்களும் படுமோசமாக சொதப்பினார்கள்.

இந்திய பிட்ச்களில் இருப்பதைவிட, தென்னாப்பிரிக்க பிட்ச்களில் ஒரு இன்ச் கூடுதல் பவுன்சர் இருக்கிறது. இதனை, போட்டியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனம்தான் சுட்டிக்காட்டியது. 

இயல்பைவிட, ஒரு இன்ச் கூடுதல் பவுன்சர் இருப்பதால்தான், இந்திய பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது. படிப்படியாக குறையும் எனக் கணிக்கப்பட்டது. 

அதேபோல், மிடில் வரிசையில் கே.எல்.ராகுல் விளையாடியபோது, பவுன்ஸ் அதிகம் இல்லை. இயல்பான நிலையில்தான் இருந்தது. பவுன்ஸ் இயல்பு நிலைக்கு திரும்பியபோது, களமிறங்கிய கே.எல்.ராகுல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். 

ஒருசில சமயம் மட்டுமே கூடுதல் பவுன்ஸ் இருந்தது. மற்ற நேரங்களில் இயல்பான பவுன்ஸ் இருந்ததாலும், அவ்வபோது தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் சில தவறான லெந்த்களில் பந்துவீசியதாலும், கே.எல்.ராகுலால் அடிக்கடி பவுண்டரி அடிக்க முடிந்தது. 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.