சதம் அடிப்பதற்காக சர்பரஸ் கானை அவுட் ஆக்கிய ஜடேஜா.... கடும் அதிருப்தியில் ரோஹித்... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடிப்பதற்காக, சர்பரஸ் கானை ரன் அவுட் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


சதம் அடிப்பதற்காக சர்பரஸ் கானை அவுட் ஆக்கிய ஜடேஜா.... கடும் அதிருப்தியில் ரோஹித்... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சதம் அடிப்பதற்காக, சர்பரஸ் கானை ரன் அவுட் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தப் பிறகு, கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. வழக்கமாக பேட்டை சுழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடும் அவர், இம்முறை சோகத்தில் இருந்தார்.

இந்திய அணி 33/3 என்ற மோசமான நிலையில் இருந்தபோது, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி, பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள்.

தயும் படிங்க: ரோஹித் நெருக்கடி... அவசரப்பட்டு ஆட்டமிழந்த ஜெய்ஷ்வால்... காலியான ஷுப்மன் கில்!

இதனால், 30/3 என இருந்த இந்திய அணியின் ஸ்கோர், 237/4 என மாறியது. ரோஹித் 131 (196) ரன்களை அடித்து ஆட்டமிழந்தப் பிறகு களத்திற்குள் வந்த சர்பரஸ் கான், தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 

ஸ்ட்ரைக் ரேட் 80-க்கும் குறையாமல் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து, பவுண்டரிகளை அடித்ததால், உடனே 48 பந்துகளில் அரை சதமும் எடுத்தார். மறுமுனையில், ரவீந்திர ஜடேஜாவும் அவ்வபோது பவுண்டரிகளை அடித்ததால், ஸ்கோர் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது.

சர்பரஸ் கான் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த நிலையில், 99 ரன்களில் இருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க முற்பட்டபோது, 62 (66) ரன்களில் சர்பரஸ் ரன்அவுட் ஆனார்.

சர்பரஸ் கான் ரன் அவுட் ஆகியதும், கேப்டன் ரோஹித் சர்மா தலையில் இருந்த தொப்பியை கழற்றி கீழே எறிந்து, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

மேலும் பலர், ரவீந்திர ஜடேஜாவை சுயநலவாதி என இணையத்தில் பதிவிட்டு, அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதயும் படிங்க: தோனி, சச்சின் சாதனையை தகர்த்து... கேப்டனாக வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

தற்போது, ரவீந்திர ஜடேஜா 110 (212), குல்தீப் யாதவ் 1 (10) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்தியா 326/5 ரன்களை எடுத்திருக்கும் நிலையில், முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது நாள் ஆட்டம் இது போல தொடர்ந்தால் இந்திய அணி 600+ ரன்களை குவித்து அசத்த வாய்ப்புள்ளதுடன்,  இந்தியா இன்னிங்ஸ் வெற்றியைப் பெறவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google