நிறைவேறியது கோலியின் 18 ஆண்டுக்கால தவம்...  சாம்பியன் பட்டம் வென்று சாதனை  படைத்த ஆர்சிபி!

நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது.


நிறைவேறியது கோலியின் 18 ஆண்டுக்கால தவம்...  சாம்பியன் பட்டம் வென்று சாதனை  படைத்த ஆர்சிபி!

நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆர்சிபி அணிகள் பலப் பரீட்சை நடத்தியதுதுடன், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என ஒன்பது பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். 
விராட் கோலி தனக்கென உரிய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். மாயங் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்களிலும், கேப்டன் ரஜத் பட்டிதார் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி என 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தனர்.

லிவிங்ஸ்டோன் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி அடங்கும். ஜித்தேஷ் ஷர்மா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என பத்து பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

ரொமேரியோ செபர்ட் ஒன்பது பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில், ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. 
பஞ்சாப் அணியின் தரப்பில் ஆர்ஸ்தீப் சிங், ஜெமிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா 4 பவுண்டரிகள் எடுத்த நிலையில் பில் சால்டின் அபார கேட்சால் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பிராப்சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ஜோஸ் இங்கிலீஷில் சிக்சர்களை பறக்கவிட்டு பஞ்சாப் அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் முதல் பந்தில் சிக்சர் அடித்த ஸ்டோனிஸ் , 2வது பந்தில் கேட்ச் ஆனார். நெஹல் வதேரா 18 ரன்களிலும், அஸ்மத்துல்லா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. 

இதன் மூலம் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறப்பாக பந்துவீசிய குர்னல் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google