நேட்டோ நாடுகள் “கோழைகள்”… “காகிதப் புலி” என டிரம்ப் கடும் விமர்சனம்

நேட்டோ நாடுகள் “கோழைகள்”… “காகிதப் புலி” என டிரம்ப் கடும் விமர்சனம்

ஹார்முஸ் நீரிணை பிரச்சினையைத் தொடர்ந்து, நேட்டோ நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்த நிலையில், அந்த நீரிணையில் சிக்கியுள்ள கப்பல் போக்குவரத்தை சீர்படுத்த அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளிடம் உதவி கோரியிருந்தது.

ஆனால், பல நேட்டோ நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப தயங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிருப்தியடைந்த டிரம்ப், “நேட்டோ நாடுகள் கோழைகள்” என்றும், “அமெரிக்கா இல்லையெனில் நேட்டோ வெறும் காகிதப் புலி” என்றும் விமர்சித்தார்.

மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவால் பலன் அடையும் நாடுகள், தேவையான நேரத்தில் உதவ மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஈரான் மீது நடைபெற்ற தாக்குதல்களில் அமெரிக்கா ஏற்கனவே முக்கிய ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாகவும், இனி நேட்டோ நாடுகளின் உதவி தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். அதே நேரத்தில், எரிபொருள் விலை உயர்வைப் பற்றி புகார் கூறும் நேட்டோ நாடுகள், அதற்கு காரணமான ஹார்முஸ் நீரிணையை திறக்க உதவ முன்வரவில்லை என்றும் அவர் சாடினார்.

இந்த கருத்துகள், சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.