ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையிலான மோதல் விரைவில் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு தடைவிதித்த ஈரானை 22 நாடுகள் கண்டித்துள்ளன. தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை பிரச்சினையில் உதவாததால் நேட்டோ நாடுகளை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா இல்லையெனில் நேட்டோ பலவீனமானது என்றும் அவர் கூறினார்.