வைபவ் சூர்யவன்ஷிக்காாக நீக்கப்பட்ட அதிரடி வீரர் - இந்திய டி20 பிளேயிங் லெவன்!

இந்தியா-அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகிறார். அபிஷேக் சர்மா நீக்கப்பட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக அறிமுகமாகும் இந்த போட்டியின் பிளேயிங் லெவன் குறித்த முழு விவரங்கள் இங்கே.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
வைபவ் சூர்யவன்ஷிக்காாக நீக்கப்பட்ட அதிரடி வீரர் - இந்திய டி20 பிளேயிங் லெவன்!

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது போட்டி பெல்ஃபாஸ்டில் நாளை (ஜூன் 26) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த தொடரில் ரசிகர்களின் கவனம் முழுவதும் இரண்டு பேரின் மீது உள்ளது. ஒருவர், இந்திய கேப்டனாக அறிமுகமாகும் ஷ்ரேயாஸ் ஐயர்; மற்றொருவர், உலக கிரிக்கெட்டின் புதிய அதிசயமான 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி.

ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்: உலகக் கோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியிலிருந்தும், டி20 அணியிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில், ஷ்ரேயாஸ் ஐயரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஷ்ரேயாஸின் சிறப்பான ஆட்டமே அவரை இந்திய அணியின் கேப்டன் என்ற பெரிய பொறுப்புக்கு கொண்டு சென்றுள்ளது. திலக் வர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம்: 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, நாளை இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகவுள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை வென்ற அவர், இலங்கையில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். அவர் அறிமுகமானால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்தியாவின் மிக இளம் அறிமுக வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

அபிஷேக் சர்மா நீக்கம்: வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக அறிமுகமாகும் நிலையில், அணியில் இருந்து அபிஷேக் சர்மா நீக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும்தான் இந்தியாவின் தொடக்க வீரர்களாக இருந்தனர். உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் முக்கியப் பங்காற்றியதால், அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பையில் சோபிக்காத அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமளிக்க வெளியேற வேண்டியிருந்தது.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

  1. வைபவ் சூர்யவன்ஷி - தொடக்க வீரர்
  2. சஞ்சு சாம்சன் - தொடக்க வீரர் & விக்கெட் கீப்பர்
  3. இஷான் கிஷன் - மூன்றாவது இடம்
  4. ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்) - நான்காவது இடம்
  5. திலக் வர்மா (துணை கேப்டன்) - ஐந்தாவது இடம்
  6. சிவம் துபே - ஆறாவது இடம்
  7. அக்சர் படேல் / வாஷிங்டன் சுந்தர் - ஆல் ரவுண்டர்
  8. ஹர்ஷித் ராணா - பந்துவீச்சு
  9. அர்ஷ்தீப் சிங் - பந்துவீச்சு
  10. ரவி பிஷ்னோய் - பந்துவீச்சு
  11. பிரசித்து கிருஷ்ணா - பந்துவீச்சு

போட்டி நேர மாற்றம்: இரு போட்டிகளும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த 7 மணிக்கு பதிலாக, ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி பயணத்தின் தொடக்கமும், வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகமும் ஆகும். இந்த இரு சிறப்பம்சங்களையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர