கிரிக்கெட்

IND vs AUS T20: தனி ஆளாகப் போராடிய அபிஷேக் ஷர்மா; 125 ரன்களில் இந்திய அணி சுருண்டது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயாஸ் ஐயர் கிரிக்கெட் ஆடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயிற்சி தொடங்கவே 2 மாதம் ஆகுமாமே!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய டி20 தொடர்: 'இந்த 3 வீரர்கள் பெரிய சம்பவம் செய்வார்கள்' - சிஎஸ்கே முன்னாள் வீரர் கணிப்பு!

இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடரில், இந்திய அணியின் மூன்று வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே எக்ஸ் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்! 8 வீரர்கள் வெளியேற்றம்; தோனி ஓய்வுக்கு முன் அதிரடி திட்டம்!

கடந்த ஐபிஎல் 18ஆவது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு கசப்பான கனவாக அமைந்தது. அந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடைசி இடத்தைப் பிடித்து சிஎஸ்கே சொதப்பியது.

சர்ச்சை பவுலர் ஆக்கி விட்டீர்கள்: 5 விக்கெட் வீழ்த்திய பின் முகமது ஷமி வேதனை பேச்சு!

செய்தியாளர்கள் தன்னைப் போன்ற வீரர்களைச் 'சர்ச்சையான பவுலராக' மாற்றிவிட்டீர்கள் என்றும், இதனால் "உங்களிடம் நான் ஏதேனும் பேசினால் கண்டிப்பாகப் பிரச்சினையில் நான் சிக்கிக் கொள்வேன்" என்றும் முகமது ஷமி பேசினார்.

அதிரவிடும் ருதுராஜ் கெய்க்வாட்: தொடர்ச்சியாக ஆட்டநாயகன் விருதுகள்! இந்திய அணியின் கதவுகள் திறக்குமா?

ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad), அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

கோலி, ரோகித் கடைசி ஆட்டம்: கண்ணீர் விட்டு அழுத ஆஸ்திரேலிய வர்ணனையாளர்; நடந்தது என்ன!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் பங்கேற்று விளையாடினர். இந்த ஜோடி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் என்று கருதப்படுகிறது.

ரோஹித் ஷர்மா, விராட் கோலிக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் 'கரப்பான்கள்': முன்னாள் கேப்டன் அதிரடி

முன்னாள் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை விமர்சிப்பவர்களைக் "கரப்பான்கள்" என்று ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

இந்திய டி20 அணி: ஆஸ்திரேலியத் தொடருக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் கம்பீருக்குத் தலைவலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கம்பீரின் ஓய்வறை திட்டத்தை செயற்படுத்தும் சுப்மன் கில்... இதுதான் கேப்டன்சியா? முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள்!

இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் எந்தவித நாட்டமும் இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் சுப்மன் கில் செயல்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர்: பும்ராவின் கம்பேக்; முழு அட்டவணை மற்றும் அணிகள் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

ரகசிய கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெற்றிக்கோப்பை! பாகிஸ்தான் அமைச்சர் மீது புகார்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும், இந்தியா வென்ற வெற்றிக் கோப்பை இன்னும் இந்திய அணியிடம் வந்து சேரவில்லை என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.