5 விக்கெட் வீழ்த்திய பும்ரா: 159 ரன்னில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
5 விக்கெட் வீழ்த்திய பும்ரா: 159 ரன்னில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ராம் மற்றும் ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்தத் தொடக்க ஜோடி பும்ராவின் ஓவரை மட்டும் தடுத்து ஆடியது. ஆனால், சிராஜின் ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாகப் பறக்கவிட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டபோதும், அவர்கள் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் 10 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்தது.

11-வது ஓவரை பும்ரா வீசியபோது, அந்த ஓவரின் 3-வது பந்தில் ரிக்கல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 13-வது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அவர் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பவுமா, 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து, வியான் முல்டர் மற்றும் டோனி டி சோர்ஜி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. வியான் முல்டர் 24 ரன்களிலும், டோனி டி சோர்ஜி 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கைல் வெர்ரேய்ன் (16), மார்கோ ஜான்சன் (0), கார்பின் போஷ் (3), சைமன் ஹார்மர் (5), கேசவ் மகராஜ் (0) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார். தென் ஆப்பிரிக்கா 159 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்திய தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர