18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு? முக்கிய வீரர்கள் இல்லை... நீக்கப்பட்ட வீரருக்கு மீண்டும் இடம்!

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிதான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 

May 21, 2025 - 08:38
18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு? முக்கிய வீரர்கள் இல்லை... நீக்கப்பட்ட வீரருக்கு மீண்டும் இடம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியானது டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்ற நிலையிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027க்கு இதுதான், இந்தியாவின் முதல் தொடர் என்பதாலும், இந்திய அணிக்கு இதனை வெற்றியுடன் துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிதான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 

இரண்டு நட்சத்திர வீரர்களை அணியில் இருந்து தூக்க கம்பீர் முடிவு?  வெளியான தகவல்!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான இடங்களில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், சாயத் சுதர்ஷன், சர்பரஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், ரிஷப் பந்த், துரூவ் ஜோரல் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

ரஞ்சிக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷர்தூல் தாகூருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், நிதிஷ் ரெட்டியை நீண்ட காலத்திற்கு ஆட வைக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. முழுநேர ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

மேலும், ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்தூல் தாகூர், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப் ஆகியோரும், முழுநேர பௌலராக இருப்பார்கள் என கூறப்படுகின்றது.

தற்போது ரோஹித், கோலி ஆகிய சீனியர்கள் இல்லாத காரணத்தால், சர்பரஸ் கானை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளார்களாம். மேலும், இந்திய ஏ அணியில் விளையாடுவதை வைத்து பார்த்து, கருண் நாயரையும் அணிக்குள் கொண்டு வரை பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். 

கேப்டன்ஸி ரேஸில் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோர் இருக்கிறார்கள். இந்திய ஏ அணி, இங்கிலாந்து சென்று, ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 

இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மே 30ஆம் தேதி முதல் போட்டியும், ஜூன் 6ஆம் தேதி இரண்டாவது போட்டியும் நடைபெறும்.

இந்திய ஏ அணி

அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்)
துரூவ் ஜோரல் (துணைக் கேப்டன்)
யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
கருண் நாயர்
நிதிஷ் ரெட்டி
ஷர்தூல் தாகூர்
இஷான் கிஷன்
மனோவ் சுதர்
தனுஷ் கோடியன்
முகேஷ் குமார்
ஆகாஷ் தீப்
ஹர்ஷித் ராணா
அன்ஷுல் கம்போஜ்
கலீல் அகமது
ருதுராஜ் கெய்க்வாட்
சர்பரஸ் கான்
துஷர் தேஷ்பண்டே
ஹர்ஷ் துபே

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!