“லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் சிறந்தது” – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கருத்து வைரல்

திருமணத்தை விட புரிதல் முக்கியம் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கருத்து. லிவ்-இன் உறவுகள் குறித்து அவர் பகிர்ந்த பார்வை சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
“லிவ்-இன் ரிலேஷன்ஷிப் தான் சிறந்தது” – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கருத்து வைரல்

மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது உறவு மற்றும் திருமணம் குறித்த பார்வையை வெளிப்படையாக பகிர்ந்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தின் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்ற அவர், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டியில், திருமணம் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி, “உறவு என்பது சட்ட ரீதியான திருமணத்தால் மட்டுமே வலுப்பெறும் ஒன்று அல்ல. இருவருக்கிடையேயான புரிதல், நம்பிக்கை, மரியாதை என்பவையே முக்கியம்” என கூறினார்.

மேலும், “எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. வாழ்க்கைத்துணை வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், திருமண வாழ்க்கையில் அமைதி இல்லாமல் இருப்பதைவிட, திருமணம் இல்லாமல் உறவில் இருப்பதே சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், திருமணத்தை எதிர்க்கவில்லை என்றும், அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு என்றும் அவர் விளக்கினார். சிலருக்கு திருமணம் பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் தரலாம், மற்றவர்களுக்கு சுதந்திரமான உறவுகள் ஏற்றதாக இருக்கலாம் என்றும் கூறினார்.

ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து விவாதித்து வருகின்றனர்.

Click for more latest சினிமா news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர