இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி: உலக கிரிக்கெட்டை கலக்க தயாராகும் சிறுவன்!
இலங்கையில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் முத்தரப்பு தொடருக்கான இந்தியா A அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் Tilak Varma அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். Riyan Parag துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அணியில் அதிக கவனம் ஈர்த்திருப்பவர் 15 வயதான இளம் திறமையாளர் Vaibhav Suryavanshi. 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் பலனாக அவர் இந்தியா A அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய அவர் 440 ரன்கள் குவித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
மிக இளம் வயதிலேயே தனது திறமையை நிரூபித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, 12 வயதில் பீகார் அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். இதன் மூலம் Sachin Tendulkar மற்றும் Yuvraj Singh உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் இளம் வயது சாதனைகளை முறியடித்து கவனம் பெற்றார்.
இந்தியாவின் U-19 அணியின் வெற்றிகளிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி உட்பட பல முக்கிய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார்.
இந்த முத்தரப்பு தொடரில் இந்தியா A, இலங்கை A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் பங்கேற்கின்றன. தொடருக்குப் பிறகு இந்தியா A அணி, இலங்கை A அணியுடன் இரண்டு பலநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்தியா A அணியில் பிரியான்ஷ் ஆர்யா, ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், யாஷ் தாக்கூர், யுத்விர் சிங், அன்ஷுல் கம்போஜ் மற்றும் அர்ஷத் கான் உள்ளிட்ட பல இளம் மற்றும் திறமையான வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கால சர்வதேச போட்டிகளுக்கான புதிய தலைமுறை வீரர்களை உருவாக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருவது தெளிவாகிறது.
