டெங்குவால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.. “நான் சாகவில்லை என்றால் வருவேன்” - நண்பருக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்
ருஹுணு பல்கலைக்கழக மாணவி சந்தலி தாரிகா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். மரணத்திற்கு முன் நண்பருக்கு அனுப்பிய “நான் சாகவில்லை என்றால் வருவேன்” என்ற கடைசி செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மாணவி மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியைச் சேர்ந்த சந்தலி தாரிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46ஆவது மாணவர் குழுவில் கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி உயிரிழப்பதற்கு முன்னர் தனது நெருங்கிய நண்பருக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்தி தற்போது பலரையும் உருக்கி வருகிறது. “நான் சாகவில்லை என்றால் வருவேன்” என்று அவர் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியே அவரது கடைசி செய்தியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவியின் திடீர் மரணம் ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தலி தாரிகாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலின் ஆபத்து குறித்து மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
