IPL 2026: “அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை”.. தோல்விக்குப் பிறகு வேதனையுடன் பேசிய அக்சர் படேல்!

IPL 2026 தொடரில் கொல்கத்தா அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது. தோல்விக்குப் பிறகு கேப்டன் அக்சர் படேல் வேதனையுடன் பேசியுள்ளார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
IPL 2026: “அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை”.. தோல்விக்குப் பிறகு வேதனையுடன் பேசிய அக்சர் படேல்!

நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி கேப்பிடல்ஸ் படுதோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள அருண் ஜெிட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் பெத்தும் நிஷங்க ஆகியோர் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும், அதன் பின்னர் வந்த வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.

அக்சர் பட்டேல் ரன் அவுட் ஆனது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இறுதியில் அசுதோஷ் ஷர்மா மட்டும் ஓரளவு போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

143 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும், பின்னர் பின் ஆலன் அதிரடியாக விளையாடி போட்டியின் போக்கையே மாற்றினார். வெறும் 47 பந்துகளில் சதம் அடித்த அவர், டெல்லி பந்துவீச்சை முழுமையாக சிதறடித்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய அக்சர் படேல், அணியின் தோல்விக்கான முக்கிய காரணமாக தொடர்ச்சியான விக்கெட் இழப்பை குறிப்பிட்டார்.

“நாங்கள் எடுத்த இலக்கு மிகவும் குறைவானது. முக்கியமான நேரத்தில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். சில ஓவர்களில் பல விக்கெட்டுகளை இழந்தது ஆட்டத்தின் போக்கை முழுவதுமாக மாற்றிவிட்டது. அந்த அழுத்தத்தை சமாளிக்கும் மனநிலை எங்களிடம் இல்லை. இந்த தோல்வியால் பிளேஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டது. இனி வரும் போட்டிகளில் பெஞ்ச் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அடுத்த சீசனுக்கான அணியை தயார்ப்படுத்துவோம்,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர