கெட்ட கனவாக மாறிய 18ஆவது சீசன்... 5 முக்கிய வீரர்களை நீக்கும் சிஎஸ்கே.. அதிரடி தீர்மானம்!
19ஆவது சீசனுக்கு தயாராகும் வேலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியுள்ளதுடன், அணிக்கு தேவையில்லாத வீரர்களை நீக்க தீர்மானித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, மறக்க முடியாத கெட்ட கனவாக ஐபிஎல் 18ஆவது சீசன் மாறியுள்ளது. ஒரு வீரர் கூட தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படவில்லை. இறுதியில், 10 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்று, பிளே ஆப் வாய்ப்பை இழந்தது.
தொடர்ந்து, 19ஆவது சீசனுக்கு தயாராகும் வேலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியுள்ளதுடன், அணிக்கு தேவையில்லாத வீரர்களை நீக்க தீர்மானித்துள்ளது.
அத்துடன், யார் யாரை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது குறித்து, சிஎஸ்கே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக, 5 முக்கிய வீரர்களை சிஎஸ்கே நீக்கிவது உறுதி என்றும் கூறப்படுகிறது.
3 போட்டிகளில் களமிறங்கிய டிவோன் கான்வே,127 ஸ்ட்ரைக் ரேட்டில், 94 ரன்களை மட்டும்தான் அடித்துள்ளார். அணியில் ரச்சின் ன் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷித், ஆயுஷ் மாத்ரே போன்ற ஓபனர்கள் இருப்பதால், கான்வேவை வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கான்வேவை வெளியேற்றிவிட்டு, மெக்குர்க்கை வாங்க உள்ளதாக கூறப்படுகின்றது. ஏனென்றால் டெல்லி அணிக்காக நடப்பு சீசனில் 5 போட்டிகளில் 55 ரன்களை மட்டும் அடித்திருப்பதால், இவரை அந்த அணி வெளியேற்ற வாய்ப்புள்ளது.
18ஆவது சீசனில் தீபக் ஹூடா, வெறும் 72.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 ரன்களைதான் அடித்தார். இவரை வெளியேற்றுவது உறுதி. அத்துடன், பஞ்சாப் கிங்ஸ் அணியில், கிளென் மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் 48 ரன்களைதான் அடித்த நிலையில், இவரை வெளியேற்ற வாய்ப்புள்ளது. எனவே அவரை சென்னை வாங்க உள்ளது.
18ஆவது சீசனில், விக்கெட்களை வீழ்த்தாமல், ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை விட்டுக்கொடுத்த ஜிம்மி ஓவர்டனை நீக்க சென்னை அணி முடிவு செய்துள்ளதுடன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராகுல் சஹாரை கழற்றிவிட்டால், அவரை சென்னை அணி வாங்கும்.
நடப்பு சீசனில், 7 போட்டிகளில் பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக்கொடுத்து 7 போட்டிகளில் 5 விக்கெட்களைதான் எடுத்ததால் அவரை நீக்க அதிக வாய்ப்புள்ளது.
கேகேஆர் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரமன்தீப் சிங்கை வெளியேற்ற வாய்ப்புள்ளது. அப்படி, ஏலத்திற்கு வந்தால் சிஎஸ்கே அவரை வாங்கும்.
நடப்பு சீசனில் சிஎஸ்கேவுக்காக வெறும் 6 ஓவர்களை மட்டுமே வீச, சௌத்ரிக்கு வாய்ப்பு கிடைத்ததுடன், அதில், சராசரியாக 12 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். இந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு ஆர்சிபி அணியின், வேகப்பந்து வீச்சாளர் ரஷிக் தார், சேப்பாக்கத்தில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசியதால், இவரை அணிக்குள் கொண்டுவர வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.