கோபத்தில் அருண்... முத்து மீனா எடுத்த முடிவு... இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் அருண் அம்மா இருவரும் வந்து சீதாவின் அம்மாவிடம் சீதா எங்கே என கேட்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் அருண் அம்மா இருவரும் வந்து சீதாவின் அம்மாவிடம் சீதா எங்கே என கேட்கின்றனர்.
மணக் கோலத்தில் எதுக்கு வெளியே அனுப்பி இருக்கீங்க என்று கேட்க என் மாப்பிள்ளை வராம கல்யாணம் நடக்காது என்று சொல்லுகிறார். ஏற்கனவே தான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இப்ப வெளியே எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க என்ன சொல்றது என்று கேட்கிறார்.
மறுபக்கம் முத்து குடித்துக் கொண்டிருக்க ஒருவர் கவனித்து வந்து எதுக்கு மூணு கிளாசில் குடிக்கிறேன் என்று கேட்க என் பொண்டாட்டி என்னை ஏமாத்திட்டா இது அந்த அருண் நான் முட்டாள் என சொல்ல எனக்கு புரியுது உன்ன முட்டாள் ஆகிட்டு உன் பொண்டாட்டி அருண் கூட ஓடிப் போயிட்டா அப்படித்தானே என்று கேட்க முத்து அவரை அடித்து வெளியே இழுத்து வருகிறார்.
என் பொண்டாட்டி பத்தி தப்பா பேசுறியா அவ கண்ணகி என்று எல்லாம் பேச இவர்கள் மூவரும் காரில் வந்து இறங்க முத்து பேசுவதை கேட்டு மீனா கண்கலங்குகிறார்.
உடனே முத்து விடும் வந்து நீங்க வாங்க என்று கூப்பிட இவங்க எதுக்கு இங்க வந்தாங்க என்று மீண்டும் கோபமாக பாருக்குள் சென்று விடுகிறார். இவர்கள் இருவரும் உள்ளே போய் முத்துவிடம் மன்னிப்பு கேட்டு கூப்பிட ஏற்கனவே முதல்ல கல்யாணம் பண்ணிட்டீங்க அப்புறம் எதுக்கு கூப்பிடுறீங்க என்று கேட்கிறார்.
நீங்க வராம இந்த கல்யாணம் நடக்காது மாமா என்று சொல்ல அதுதான் ஏற்கனவே நான் வராமல் கல்யாணத்தை முடிச்சிட்டு அப்புறம் என்ன என்று சொல்ல சீதா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் இருந்தாலும் முத்து பல சம்மதிக்காக தான் இருவரும் நீங்க வராம நாங்க இங்கிருந்து போக மாட்டோம் என இருவரும் பாரில் உட்கார்ந்து விடுகின்றனர்.
மறுபக்கம் அருண் சந்திராவிடம் இப்ப எதுக்கு அவ போனா ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாளா என்று கேட்க கல்யாணம் ஆன கொஞ்ச நாள் எப்படி பேசுறீங்களே என் பொண்ணு கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல வாழ்ந்துகிட்டு இருக்கா பொய் சொல்லி இருக்கா அந்த கோபம் இருக்காதா என்று சொல்ல அதற்கு வரும் அது அவங்களோட பர்சனல் என்று சொல்லுகிறார்.
இங்கே எல்லாரும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு என்ன சொல்றது என்று கேட்கிறார். மறுபக்கம் முத்துவும் பிடிவாதமாக வரமாட்டேன் என சொல்லுகிறார்.மீனா அங்க எல்லாரும் வந்துட்டாங்க அசிங்கமா நினைப்பாங்க என்று சொல்ல அவங்க அசிங்கமா நினைக்கிறது பத்தி யோசிக்கிறேன் உன் புருஷன் அசிங்கப்படுவான் என்று நினைக்கல இல்ல என்ன பண்றது நான் சாதாரண டிரைவர் அப்படித்தானே என்று கேட்கிறார்.
அருண் சீதாவிற்கு ஃபோன் போட்டுக் கொண்டே இருக்க போன் எடுக்காததால் வரும் டென்ஷன் ஆகிறார். முத்து என்ன சொல்லுகிறார்? மண்டபத்தில் என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.