தேடிவந்த இந்திய அணி பயிற்சியாளர் பதவி : ரிக்கி பொண்டிங் என்ன சொன்னார் தெரியுமா..!

இது தொடர்பாக என் மகனிடம் கூறினேன். உடனடியாக அவர், ஏற்றுக்கொள்ளுங்கள் அடுத்த 2 ஆண்டுகள் இந்தியாவில் இருப்பது ஜாலியாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
தேடிவந்த இந்திய அணி பயிற்சியாளர் பதவி : ரிக்கி பொண்டிங் என்ன சொன்னார் தெரியுமா..!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி தேடி வந்த நிலையில் அதனை தனது மகனிடம் தெரிவித்தபோது இந்தியாவில் தங்கியிருப்பதற்காக பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியதாக அவுஸ்ரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

எனினும் பயிற்சியாளர் பதவியை தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து ரிக்கி பொண்டிங் தெரிவிக்கையில்,

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், ஐபிஎல் தொடரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காது. இது அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேசிய அணியின் பயிற்சியாளராக 10 முதல் 11 மாதங்கள் வீரர்களுடன் இருக்க வேண்டும். எனது வாழ்க்கை முறைக்கு இப்போது அது சரி வராது என்று நினைக்கிறேன்.

ஐபிஎல் தொடரின் போது எனது மனைவி மற்றும் மகன் 5 வாரங்களும் என்னுடன் இருந்தனர். இந்தியாவில் இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியின் கலாச்சாரமும் அவர்களுக்கு பிடித்துள்ளது. இப்போதைய சூழலில் முழு நேரம் பணியாற்றும் நிலையில் நான் இல்லை.

இது தொடர்பாக என் மகனிடம் கூறினேன். உடனடியாக அவர், ஏற்றுக்கொள்ளுங்கள் அடுத்த 2 ஆண்டுகள் இந்தியாவில் இருப்பது ஜாலியாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்தார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர