வருங்கால கணவரை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண்.. காதலனுடன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

புனேயில் மலையேற்றத்தின் போது 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம். வருங்கால மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
வருங்கால கணவரை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண்.. காதலனுடன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

மராட்டிய மாநிலம் புனேயில் மலையேற்றத்தின் போது 400 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞரின் மரண வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதலில் விபத்தாக கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் திட்டமிட்ட கொலை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புனே மாவட்டத்தின் ககுஞ்சே பகுதியைச் சேர்ந்த 26 வயதான கேதன் விஷால் அகர்வால், குடும்பத்தினர் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராக பணியாற்றி வந்தார். அவருக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

சியா கோயலின் பிறந்தநாளை முன்னிட்டு, புனே மாவட்டம் லோனாவாலா பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு வருமாறு கேதன் விஷாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் 18-ஆம் தேதி இருவரும் அங்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்களுடன் மற்றொரு நபரும் இணைந்துள்ளார்.

மலையின் விளிம்புப் பகுதியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கேதன் விஷால் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

ஆனால் விசாரணையின் போது சியா கோயல் அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதை போலீசார் கவனித்தனர். இதனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது சியா கோயல், சேத்தன் சவுத்ரி என்ற இளைஞருடன் காதல் உறவில் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சியா கோயலும் அவரது காதலனும் சேர்ந்து கேதன் விஷாலை திட்டமிட்டு மலையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக போலீசார் கண்டறிந்தனர். திருமணத்தில் விருப்பமில்லாத சியா, தனது காதலுக்கு கேதன் தடையாக இருப்பதாக கருதி இந்த சதித் திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகியோரை போலீசார் கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர