WhatsApp புதிய ‘After Reading’ வசதி: 15 நிமிடத்தில் தானாக அழியும் மெசேஜ்கள்

பயனர்களின் தனியுரிமையை உயர்த்தும் புதிய அம்சம் வாட்ஸ் ஆப்பில் வர உள்ளது. மெசேஜ் படித்த 15 நிமிடத்தில் தானாகவே அழியும் வசதி அறிமுகமாகிறது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
WhatsApp புதிய ‘After Reading’ வசதி: 15 நிமிடத்தில் தானாக அழியும் மெசேஜ்கள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள WhatsApp, தனது சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘After Reading’ எனப்படும் புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த அம்சம் குறுகிய நேரத்தில் மெசேஜ்கள் தானாக அழியும் முறையை வழங்கும் என்பதால், பயனர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய வசதியின் முக்கிய அம்சமாக, ஒரு மெசேஜ் பெறுநரால் படிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் தானாகவே அழிந்து விடும். மேலும், அந்த மெசேஜ் திறக்கப்படாமல் இருந்தால், 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அப்டேட் குறித்த தகவலை WABetaInfo வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வாட்ஸ் ஆப்பில் ‘Disappearing Messages’ என்ற வசதி உள்ளது. ஆனால் அது முழு உரையாடலுக்கே பொருந்தும். புதிய ‘After Reading’ அம்சம் மூலம், பயனர்கள் தனிப்பட்ட மெசேஜ்களை மட்டும் தேர்வு செய்து அனுப்ப முடியும் என்பது இதன் முக்கிய வித்தியாசமாகும். இதனால் குறுகிய கால தனியுரிமை பாதுகாப்பு கிடைக்கும்.

பாஸ்வேர்டு, OTP போன்ற நுணுக்கமான தகவல்களை பகிரும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயனர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில், ‘View Once’ போன்ற ஒருமுறை மட்டுமே காணக்கூடிய வசதிகளுடன் இணைந்து, இந்த புதிய அப்டேட் வாட்ஸ் ஆப்பின் பாதுகாப்பு அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி எப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர