இலங்கையில் சட்டவிரோதமாக தங்கிய 76 வெளிநாட்டு பிரஜைகள் கைது… நாடுகடத்த நடவடிக்கை
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுற்றுலா மற்றும் வணிக விசாக்களில் நாட்டிற்கு வந்த இந்த குழுவினர் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
இதில் 36 பேரின் விசாக்கள் காலாவதியாகியிருந்ததுடன், மீதமுள்ள 40 பேர் விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்; அவர்களில் 6 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த குழுவினர் வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, அவர்களை விரைவில் தாய்நாட்டிற்கு நாடுகடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம், நாட்டில் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான கண்காணிப்புகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.
