5ஆவது டெஸ்டுக்கு முன்னதாக ஓய்வை அறிவிப்பாரா ரோஹித்? என்ன சொல்கிறது பிசிசிஐ? 

Key Points
  • டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவதால், அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
5ஆவது டெஸ்டுக்கு முன்னதாக ஓய்வை அறிவிப்பாரா ரோஹித்? என்ன சொல்கிறது பிசிசிஐ? 

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வருவதால், அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 4 டெஸ்ட் போட்டிகளில், ஜஸ்பரீத் பும்ரா 30 விக்கெட்களை எடுத்துள்ள நிலையில், இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, 3 டெஸ்ட்களில் வெறும் 31 ரன்களைதான் எடுத்திருக்கிறார். 

இது இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை, இதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இந்தாண்டு துவக்கத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா அபாரமாக விளையாடியபோதும், 2024-ல் இவரது டெஸ்ட் சராசரி வெறும் 20ஆக தான் இருக்கிறது. 

இந்த வருடத்தில், இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 2 சதம், 2 அரை சதங்களை மட்டும்தான் அடித்துள்ளார். இந்த 14 டெஸ்டில் 619 ரன்களைதான் சேர்க்க முடிந்தது.

வேறு எந்த இந்திய வீரரும் இப்படி சொதப்பியிருந்தால், நிச்சயம் அணியில் இருந்து நீக்கியிருப்பார்கள். ஆனால், ரோஹித் இந்திய டெஸ்ட் அணிக் கேப்டன், அவரது கேப்டன்ஸிக்காகதான், இவரை விட்டுவைத்துள்ளனர். 

இருப்பினும், கிடைக்கும் வாய்ப்பை, தொடர்ந்து சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறார். 4ஆவது டெஸ்டில் கூட, இரண்டு இன்னிங்ஸிலும் மட்டமான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்தார்.

இதனால், 5ஆவது டெஸ்டில் இவரை சேர்க்க கூடாது எனக் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய டெஸ்ட் அணியில், பார்மில் இருக்கும் துரூவ் ஜோரல் வெளியே அமர்ந்திருக்கிறார். 

மேலும், பார்மில் இருக்கும் கே.எல்.ராகுலையும், ரோஹித்திற்காக ஓபனர் இடத்தைவிட்டு, ஒன்டவுன் இடத்தில் விளையாடுகிறார். இதன்மூலம், ரோஹித் இல்லாமலே சிறந்த 11 அணியை, கட்டமைக்க முடியும். மேலும், கேப்டன்ஸிக்கு ஜஸ்பரீத் பும்ராவும் இருக்கிறார்.

இருப்பினும், 5ஆவது டெஸ்ட் போட்டி துவங்க, இடையில் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்றுதான் கருதப்படுகிறது. 

குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், 11 அணியில், தவிர்க்க முடியாத வகையில் ஷுப்மன் கில், துரூவ் ஜோரலை கொண்டு வந்தாலும், ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வாய்ப்பு இல்லை என்றுதான் கருதப்படுகிறது.

மேலும், சமீபத்தில் இந்தியா டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா கேப்டன்ஸியில்தான் வென்றது. இதனால், ரோஹித் சர்மா, அவராகவே கேப்டன் பதவியில் இருந்து விலகும் வரை பிசிசிஐ, இதுகுறித்து முடிவு எடுக்காது எனவும் கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்பட்ட மகேந்திரசிங் தோனி, அத்தொடரின் நடுப்பகுதியிலேயே ஓய்வு அறிவித்துவிட்டு, விராட் கோலியிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்தார். 

இதேபோல், ரோஹித் சர்மாவும் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google