லிட்ரோ - லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ -  லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையால் எரிசக்தி சந்தைகள் அதிர்வில் இருக்கும் நிலையில், இலங்கையில் எரிவாயு விலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் ன்ன குணவர்தன, மார்ச் மாத இறுதி வரை எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரூ.300 அளவில் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதால், உடனடி மாற்றம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்துக்காட்டினார்.

மேலும், புதிய எரிவாயு கையிருப்பு நாட்டை வந்தடைந்துள்ளதால் விநியோகத்தில் சிக்கல் ஏற்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20 அன்று சுமார் 33,000 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் மாலைத்தீவை வந்தடைந்ததுடன், அங்கிருந்து கொழும்பு நோக்கி சிறிய கப்பல்களில் மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறைந்தபட்சம் புத்தாண்டு காலம் வரை விலை நிலைத்தன்மை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லாஃப்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர், தற்போதைய உலகளாவிய சூழ்நிலை மிகவும் நிலையற்றதாக இருப்பதால் எதிர்கால விலை நிலவரத்தை கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார். போர் சூழ்நிலையும் சர்வதேச சந்தை மாற்றங்களும் விலைகளை நேரடியாக பாதிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விலை உயர்வு அச்சத்தால் பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை வாங்கி சேமித்து வைப்பது சந்தையில் தற்காலிக நெருக்கடியை உருவாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவைக்கு அதிகமாக வாங்காமல் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.