அரையிறுதிக்கான முக்கிய போட்டி.. மழைக்கு வாய்ப்பு உள்ளதா? போட்டி நடக்குமா? வானிலை அறிக்கை இதோ!

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது போட்டியில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
அரையிறுதிக்கான முக்கிய போட்டி.. மழைக்கு வாய்ப்பு உள்ளதா? போட்டி நடக்குமா? வானிலை அறிக்கை இதோ!

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது போட்டியில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்த போட்டி ஆன்டிகுவா நார்த் சவுண்ட் விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

 சூப்பர் 8 சுற்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக கணிசமான ரன் ரேட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும்.

கம்பீர் இருக்கட்டும்.. அவரை கூட்டிட்டு வாங்க.. பிசிசிஐ திட்டத்தில் புதிய திருப்பம்! 

அதே நேரம், பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது. 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் அடிக்கடி மழை இடையூறு செய்வதால், இன்றைய போட்டி குறித்த அச்சம் இருநாட்டு ரசிகர்களுக்குமே உள்ளது.

ஆனால், இன்றைய போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் 23 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அத்துடன், பகல் முழுவதும் நல்ல வெப்பநிலை காணப்படும் என்று கூறப்படுகிறது. 

எனவே இன்றைய போட்டி எந்தவித பாதிப்பும் இல்லாமல் 40 ஓவர்களும் நடைபெறும்.  அத்துடன்,  மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர