வெற்றிக்கு காரணம் இதுதான்... சூர்யா, ஹர்திக் பேட்டிங் குறித்து ரோகித் சர்மா!

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
வெற்றிக்கு காரணம் இதுதான்... சூர்யா, ஹர்திக் பேட்டிங் குறித்து ரோகித் சர்மா!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியாவின் பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக இருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ,

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற பும்ராவின் பவுலிங்கை ஸ்மார்டாக பயன்படுத்தியதும் ஒரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் படைத்த பிரம்மாண்ட சாதனை... ரோகித் - கோலியால முடியல... ரசிகர்கள் ஆச்சரியம்!

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா இருவரும் 5வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த வெற்றிக்கு பின் ரோகித் சர்மா பேசுகையில், கடந்த 2 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டி20 போட்டிகளை விளையாடி இருக்கிறோம். அதனால் முன்கூட்டியே எங்களால் திட்டமிட முடிந்தது. 

181 ரன்ற சவாலான இலக்கை நிர்ணயித்த இந்திய அணியின் பேட்டிங்கை பாராட்ட வேண்டும். ஏனென்றால் 181 ரன்கள் இருக்கும் போது அனுபவம் வாய்ந்த எங்களின் பவுலிங் படையால் என்ன செய்ய்ய முடியும் என்று நன்றாக தெரியும்.

சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் அவர்களின் ரோலை சரியாக செய்து வருகின்றனர். பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும். எந்த சூழலில் விளையாடினாலும், பும்ரா தான் வீரராக பொறுப்பை தன் மீது ஏற்றிக் கொள்வார்.

இன்றைய ஆட்டத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினோம். அது சூழலையும், பிட்சையும், எதிரணியை கணித்தே செய்யப்பட்ட மாற்றங்கள். அதேபோல் அடுத்தடுத்த போட்டிகளில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவும் வாய்ப்புள்ளது என்றார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர